முஜாஹிதீன்களின் தலைவரும் உறுதிப்பாட்டின் சின்னமுமான உமர் முக்தாரின் தியாக நினைவு நாள்!

Date:

16.09.1931- 16.09.2025

முஜாஹிதீன்களின் தலைவராகவும் உறுதிப்பாட்டின் சின்னமாகவும் விளங்கிய உமர் முக்தார் 1862 ஆம் ஆண்டு கிழக்கு லிபியாவின் அல்-பட்னானில் பிறந்தார்.

மார்க்கப் பின்னணியில் வளர்ந்த அவர், ஜிஹாத் என்ற ஆக்கிரமிப்பாளனுக்கு எதிரான போராட்டக் கருத்துக்களால் வழிநடத்தப்பட்டார்.

இத்தாலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக அவர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான போராட்டத்தை முன்னெடுத்தார். முஜாஹிதீன் அணிகளை நிறுவி, ஒழுங்கமைத்து, எதிர்ப்புப் போராட்டத்தை வலுப்படுத்தினார்.

அவரது உறுதியான வழிநடத்தலும் தியாக உணர்வும் அரபு மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு ஊக்கமாக அமைந்தது.

1931 ஆம் ஆண்டில் கடுமையான போருக்குப் பிறகு உமர் முக்தார் பிடிபட்டு (சஹீத்) தூக்கிலிடப்பட்டார். ஆனால் அவரது தியாக உயிர் தலைமுறைகள் முழுவதும் எதிர்ப்பின் தீப்பொறியாகத் தொடர்ந்து பரவியுள்ளது.

16.09.2025 அவரது தியாக நினைவு நாளில், உறுதிப்பாடு, சுதந்திரம் மற்றும் விடுதலைக்கான அர்த்தங்கள் மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றன.

“உலகளாவிய உறுதிப்பாட்டின் கடற்படை” என அழைக்கப்படும் FLOTILLA அமைப்பு, ஆக்கிரமிப்புக்கும் முற்றுகைக்கும் எதிராக போராடும் அடையாளமாக அவரது பெயரை தாங்கி பயணிக்கிறது.

உமர் முக்தார் சஹீத் பதவி அடையும் வரை கண்ணியத்துடன் எதிர்ப்பை முன்னெடுத்தது போலவே, அவரது நினைவு தலைமுறைகளையும் தொடர்ந்து அப்பாதையில் ஊக்குவிக்கிறது.

போராட்ட வீரர் உமர் முக்தாரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...