ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வருடாந்த மாநாடு நாளை!

Date:

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடும் புதிய நிர்வாக தெரிவும் நாளை 27ஆம் திகதி மு.ப.9.00 மணிக்கு கொழும்பு டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

மீடியா போரத்தின் தலை­வரும் சிரேஷ்ட ஊட­க­வி­ய­லா­ள­ரு­மான கலா­பூ­ஷணம் என். எம் அமீன் தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள இந்த மாநாட்டில் சுகா­தார மற்றும் வெகு­ஜன ஊட­கத்­துறை அமைச்­சரும், அமைச்­ச­ரவை பேச்­சா­ள­ரு­மான டாக்டர் நலிந்த ஜய­திஸ்ஸ பிர­தம அதி­தி­யா­கவும், இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்­தானி கௌரவ அதி­தி­யா­கவும் முக்­கி­யஸ்­தர்கள் பலர் சிறப்பு அதி­தி­க­ளா­கவும் கலந்து சிறப்­பிக்­க­வுள்­ளனர்.

இந்த மாநாட்டின் போது முஸ்லிம் மீடியா போரத்தின் நடப்பு ஆண்டுக்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவும் இடம் பெறவுள்ளது.

இதேவேளை பேராசிரியர் எம்.எச் ஜவஹருல்லா எம்.எல்.ஏ (தமிழ்நாடு – இந்தியா) எழுதிய செய்ன் ஃபாசில் மொழிபெயர்த்த ‘நபிதுமாங்கே சமாஜ சபந்ததா'(‘Nabithumange Samaaja Sabandatha’) புத்தக வெளியீடும் இடம்பெறவுள்ளது.

புத்தக விமர்சனத்தை களனிப் பல்கலைக்கழக சமூக அறிவியல் பீட வரலாற்றுத் துறைத் தலைவர் கல்கந்தே தம்மானந்த தேரர் நிகழ்த்தவுள்ளார்.

Popular

More like this
Related

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்!

‘ரைசினா கலந்துரையாடல் 2026’ (Raisina Dialogue 2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா...

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...