இலங்கையின் மூன்றாவது நெனோ செயற்கைக்கோள் விண்வெளிக்கு!

Date:

உள்ளூர் பொறியாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நெனோ செயற்கைக்கோளை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சர்வதேச விண்வெளி சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மொரட்டுவை ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பர்ட்ஸ் – எக்ஸ் டிராகன்பிளை என பெயரிப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி நாசாவால் ஏவப்பட்ட SPX-33 ரொக்கெட் மிஷன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இலங்கையின் முதல் நெனோ செயற்கைக்கோளானா “ராவணன்-1” செயற்கைக்கோளும், 2022 ஆம் ஆண்டு 5 சர்வதேச தரப்பினர்களை உள்ளடக்கிய தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட “கிட்சூன்” செயற்கைக்கோளும் இதற்கு முன்னர் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டிருந்தன.

அதற்கிணங்க பர்ட்ஸ் – எக்ஸ் டிராகன்பிளை நெனோ செயற்கைக்கோள் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வெற்றி சோகமாக மாறிய தருணம்: கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை காலமானார்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர் துனித் வெல்லலகேயின் தந்தை சுரங்க...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

செப்டம்பர் 17-19 திகதிகளில் இந்தோனேசியாவில் நடைபெறும் மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு!

அஷ்ஷைக்.எஸ்.எச்.எம். பளீல் இந்தோனேசியாவில் இருந்து... "மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்"...

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள் பதிவு.

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள்...