18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

Date:

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று (03)  ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழங்கினார்.

விசேட தர நீதித்துறை அதிகாரிகள் 17 பேரும் மற்றும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி ஒருவரும் இவ்வாறு மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111 ஆவது அரசியலமைப்பின் (2) ஆவது உப பிரிவின்படி ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

நீதிபதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பட்டியல் – வகித்த பதவிகள்

1. எஸ்.எஸ்.கே. விதான – மாவட்ட நீதிபதி
2. ஏ.எம்.ஐ.எஸ். அத்தநாயக்க – மாவட்ட நீதிபதி
3. ஏ.எம்.எம். ரியால் – மாவட்ட நீதிபதி
4. டீ.பீ. முதுங்கொடுவ, – மாவட்ட நீதிபதி
5. எஸ்.பி.எச்.எம்.எஸ். ஹேரத் – மேலதிக மாவட்ட நீதிபதி
6. ஜே. கஜனிதீபாலன் – மாவட்ட நீதிபதி
7. டி.எம்.டி.சி. பண்டார நீதிச் சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்
8. எச்.எம்.பி.ஆர். விஜேரத்ன – மேலதிக மாவட்ட நீதிபதி
9. டி.எம்.ஏ. செனவிரத்ன – மேலதிக மாவட்ட நீதிபதி
10. ஏ.ஏ. ஆனந்தராஜா நீதவான்
11. ஜி.என். பெரேரா – மாவட்ட நீதிபதி
12. ஏ. ஜுடேசன் – மாவட்ட நீதிபதி
13. திருமதி.டபிள்யூ.கே.டி.எஸ். வீரதுங்க – மாவட்ட நீதிபதி
14. ஆர்.பி.எம்.டி.ஆர். வெலிகொடபிடிய – மாவட்ட நீதிபதி
15. செல்வி கே.டி.என்.வி. லங்காபுர, நீதவான்
16. டி.எம்.ஆர்.டி. திசாநாயக்க – மாவட்ட நீதிபதி
17. எம்.ஐ.எம். ரிஸ்வி – மாவட்ட நீதிபதி
18. திருமதி. ஏ. ஜெயலக்ஷி டி சில்வா – சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஞாயிறு இரவு நிகழும் சந்திரகிரகணம்: நிலா சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்!

நாளை செப்டம்பர் 7ஆம்  ஞாயிற்றுக்கிழமை இரவு முழு சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது. சந்திரகிரணத்தின்போது...

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் DIG நியமனம்

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா...

மீலாத் தினத்தை முன்னிட்டு தமிழ் நாட்டில் சமூக நல்லிணக்க பேரணி!

தமிழ்நாடு தோப்புத்துறையில் மீலாது நபியை முன்னிட்டு தோப்புத்துறையில் ஹஜ்ரத் ஷெய்கு அப்துல்...

பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் அஞ்சலிக்காக தங்காலை மாநகர சபையில்..!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பஸ் விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர...