18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

Date:

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று (03)  ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழங்கினார்.

விசேட தர நீதித்துறை அதிகாரிகள் 17 பேரும் மற்றும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி ஒருவரும் இவ்வாறு மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111 ஆவது அரசியலமைப்பின் (2) ஆவது உப பிரிவின்படி ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

நீதிபதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பட்டியல் – வகித்த பதவிகள்

1. எஸ்.எஸ்.கே. விதான – மாவட்ட நீதிபதி
2. ஏ.எம்.ஐ.எஸ். அத்தநாயக்க – மாவட்ட நீதிபதி
3. ஏ.எம்.எம். ரியால் – மாவட்ட நீதிபதி
4. டீ.பீ. முதுங்கொடுவ, – மாவட்ட நீதிபதி
5. எஸ்.பி.எச்.எம்.எஸ். ஹேரத் – மேலதிக மாவட்ட நீதிபதி
6. ஜே. கஜனிதீபாலன் – மாவட்ட நீதிபதி
7. டி.எம்.டி.சி. பண்டார நீதிச் சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்
8. எச்.எம்.பி.ஆர். விஜேரத்ன – மேலதிக மாவட்ட நீதிபதி
9. டி.எம்.ஏ. செனவிரத்ன – மேலதிக மாவட்ட நீதிபதி
10. ஏ.ஏ. ஆனந்தராஜா நீதவான்
11. ஜி.என். பெரேரா – மாவட்ட நீதிபதி
12. ஏ. ஜுடேசன் – மாவட்ட நீதிபதி
13. திருமதி.டபிள்யூ.கே.டி.எஸ். வீரதுங்க – மாவட்ட நீதிபதி
14. ஆர்.பி.எம்.டி.ஆர். வெலிகொடபிடிய – மாவட்ட நீதிபதி
15. செல்வி கே.டி.என்.வி. லங்காபுர, நீதவான்
16. டி.எம்.ஆர்.டி. திசாநாயக்க – மாவட்ட நீதிபதி
17. எம்.ஐ.எம். ரிஸ்வி – மாவட்ட நீதிபதி
18. திருமதி. ஏ. ஜெயலக்ஷி டி சில்வா – சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.

 

Popular

More like this
Related

இயேசு போதித்த ‘பிறரை நேசித்தல்’ எனும் உன்னத தர்மத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவோம்: பிரதமரின் வாழ்த்துச் செய்தி!

ஒற்றுமை, அன்பு மற்றும் பரிவுணர்வுடனும் பொறுப்புடனும் ஒன்றிணைந்து செயற்பட நாம் அனைவரும்...

தேசமாக ஒன்றிணைந்து, தைரியத்துடனும் ஒற்றுமையுடனும் சவால்களை எதிர்கொள்வோம்: ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி.

ஜனாதிபதி அநுர குமாரவின்  கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி.. உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ பக்தர்கள்...

நாட்டின் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில்...

கைதான அர்ச்சுனா எம்.பிக்கு பிணை!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த...