60 ஆண்டுகளில் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல் சிரிய ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷரா.

Date:

நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டங்களில் பங்கேற்க சிரியா ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷரா நியூயார்க் விஜயம் செய்துள்ளார்.
 
 சுமார் ஆறு தசாப்தங்களுக்கு பின், ஒரு சிரிய ஜனாதிபதி பொதுச் சபையில் கலந்துகொள்வது முதற்தடவையாகும் ஆகும்.
 
1967ஆம் ஆண்டு தான் கடைசியாக சிரிய ஜனாதிபதி ஒருவர் ஐ.நா பொதுச் சபையில் கலந்துகொண்டிருந்தார்.
 
அதற்கு பின், அசாத் குடும்பத்தின் ஐம்பது ஆண்டுகால ஆட்சி கடந்த டிசம்பரில் முடிவுக்கு வந்தது. அப்போது அப்போதைய ஜனாதிபதி பஷார் அசாத், அல்-ஷரா தலைமையிலான திடீர் கிளர்ச்சியால் பதவியிழந்தார். இதன் மூலம் சிரியாவின் 14 ஆண்டுகள் நீண்ட உள்நாட்டுப் போரும் நிறைவடைந்தது.
 
அதன்பிறகு, அல்-ஷரா அரபு நாடுகளுடனும், மேற்கத்திய நாடுகளுடனும் உறவுகளை மீண்டும் உருவாக்க முயற்சித்து வருகிறார்.

Popular

More like this
Related

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த துருக்கி

காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும்...

அமைச்சர் விஜித ஹேரத் சவூதி பயணம்

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத்...

மாகாண சபைத் தேர்தலை இந்த வருடத்தில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு: பாராளுமன்றில் ஜனாதிபதி

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் அதற்காக...

2026ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

2026 ஆம் ஆண்டு வரவு செலவு தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான...