அரச சேவையை இலகுபடுத்தும் Government SuperApp!

Date:

அரச சேவைப் பணிகளை இலகுவாக முன்னெடுக்கும் வகையில் ‘அரசாங்க சூப்பர் எப்’ ஒன்றை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஒன்றுக்கொன்று வித்தியாசமான முறைமைகள், பல்வித அத்தாட்சிப்படுத்தும் செயன்முறைகள் மற்றும் பல்வேறு அரச திணைக்களங்கள் மூலம் மீண்டும் மீண்டும் தரவுகளை உட்சேர்ப்பதற்குத் தேவையான அரச சேவைகளை வழங்குவதற்காக சமகாலத்தில் ஒன்றுக்கொன்று வித்தியாசமான அணுகுமுறைகளால், பிரஜைகளுக்கு குறிப்பிடத்தக்களவு சிரமங்கள் ஏற்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனால் வருடாந்தம் 500 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான பொருளாதாரப் பாதிப்புக்கள் ஏற்படுகின்றமையும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதனால், இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்திற்கமைய, பிரஜைகளுக்கு தனியான கணணி செயலியொன்றின் மூலம் அரச சேவைகளை வழங்குவதற்காக, விரிவான விடயங்களை உள்ளடக்கக் கூடிய வகையில் ‘அரசாங்க சுப்பர் அப்’ செயலியை (Government SuperApp) அபிவிருத்தி செய்வது மூலோபாய முன்னுரிமையாக அடையாளங் காணப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...