கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

Date:

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி – ஒரு நடைமுறை அணுகுமுறை என்னும் தலைப்பிலான செயலமர்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (ORCHID) கூடத்தில் இடம் பெறவுள்ளது.

இம்மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் நண்பகல் 12:00 மணிவரை மேற்படி செயலமர்வு இடம் பெறவுள்ளதாக அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் இல்ஹாம் மரைக்கார் தெரிவித்தார்.

நிகழ்வின் வளவாளராக டாக்டர் ஹஜாரா சதாம் (PhD, Bsc, Msc, PGd, மருத்துவ உளவியலாளர் & விரிவுரையாளர்) கலந்துகொண்டு செயலமர்வை சிறப்பிக்க உள்ளார்.

இச் செயலமர்வில் பின் வருவோர் கலந்து கொள்வதன் மூலம் அதிகமான நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும் என நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

* ஆசிரியர்கள்
* பாலர் பள்ளி ஆசிரியர்கள்
* தன்னார்வலர்கள்
* உளவியல் துறை மாணவர்கள்
* பல்கலைக்கழக மாணவர்கள்
* யுனானி மருத்துவர்கள்
* ஆயுர்வேத மருத்துவர்கள்
* ஆலோசகர்கள்
* இல்லத்தரசிகள் இவர்களுடன்
* பல்துறை சார்ந்தவர்களுக்கும் மேற்படி செயலமர்வு அதி கூடிய நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும்.

பதிவுகளை மேற்கொள்ள விரும்புவோர் உடனடியாக +94 76 52 04 604 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அமேசன் பணிப்பாளர் வேண்டியுள்ளார்.

அதேவேளை இச் செயலமர்வில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிவித்தல்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிடப்பட்ட முறையில் நடைபெறுமென பரீட்சைகள்...

நாட்டில் பல பகுதிகளில் 75 மி.மீ அதிக பலத்த மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

தெற்காசியாவின் 2ஆவது அமைதியான நாடாக இலங்கை தேர்வு!

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனத்தினால் (IEP)...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் தீர்க்கமான நாள்: அரசுத் தரப்பு சாட்சிய விசாரணை நிறைவு!

இலங்கையில் அதிர்வலையை ஏற்படுத்திய 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான...