முஜாஹிதீன்களின் தலைவரும் உறுதிப்பாட்டின் சின்னமுமான உமர் முக்தாரின் தியாக நினைவு நாள்!

Date:

16.09.1931- 16.09.2025

முஜாஹிதீன்களின் தலைவராகவும் உறுதிப்பாட்டின் சின்னமாகவும் விளங்கிய உமர் முக்தார் 1862 ஆம் ஆண்டு கிழக்கு லிபியாவின் அல்-பட்னானில் பிறந்தார்.

மார்க்கப் பின்னணியில் வளர்ந்த அவர், ஜிஹாத் என்ற ஆக்கிரமிப்பாளனுக்கு எதிரான போராட்டக் கருத்துக்களால் வழிநடத்தப்பட்டார்.

இத்தாலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக அவர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான போராட்டத்தை முன்னெடுத்தார். முஜாஹிதீன் அணிகளை நிறுவி, ஒழுங்கமைத்து, எதிர்ப்புப் போராட்டத்தை வலுப்படுத்தினார்.

அவரது உறுதியான வழிநடத்தலும் தியாக உணர்வும் அரபு மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு ஊக்கமாக அமைந்தது.

1931 ஆம் ஆண்டில் கடுமையான போருக்குப் பிறகு உமர் முக்தார் பிடிபட்டு (சஹீத்) தூக்கிலிடப்பட்டார். ஆனால் அவரது தியாக உயிர் தலைமுறைகள் முழுவதும் எதிர்ப்பின் தீப்பொறியாகத் தொடர்ந்து பரவியுள்ளது.

16.09.2025 அவரது தியாக நினைவு நாளில், உறுதிப்பாடு, சுதந்திரம் மற்றும் விடுதலைக்கான அர்த்தங்கள் மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றன.

“உலகளாவிய உறுதிப்பாட்டின் கடற்படை” என அழைக்கப்படும் FLOTILLA அமைப்பு, ஆக்கிரமிப்புக்கும் முற்றுகைக்கும் எதிராக போராடும் அடையாளமாக அவரது பெயரை தாங்கி பயணிக்கிறது.

உமர் முக்தார் சஹீத் பதவி அடையும் வரை கண்ணியத்துடன் எதிர்ப்பை முன்னெடுத்தது போலவே, அவரது நினைவு தலைமுறைகளையும் தொடர்ந்து அப்பாதையில் ஊக்குவிக்கிறது.

போராட்ட வீரர் உமர் முக்தாரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

Popular

More like this
Related

மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை...

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச்...

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...