இலஞ்சம் வாங்கிய முன்னாள் சீன அமைச்சருக்கு மரணதண்டனை

Date:

சீனாவில் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு கடந்த சில காலமாகவே லஞ்சம் மற்றும் ஊழல் அரசியல் தலைவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அப்படித் தான் சீனாவைச் சேர்ந்த  விவசாயத் துறை அமைச்சர் டாங் ரெஞ்சியன் என்பவர் மீது கடந்தாண்டு இலஞ்சம் வாங்கிய புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரே ஆண்டில் அவர் மீதான விசாரணை நடந்து முடிந்துள்ள நிலையில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டாங் ரென்ஜியன் கடந்த 2007 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் சீன அரசில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

அப்போது சில குறிப்பிட்ட திட்டங்களைச் செய்து கொடுக்க அவர் ரொக்கம் மற்றும் சொத்துக்களாக இலஞ்சம்  பெற்றதாகப் புகார்கள் உள்ளன. இப்படி அவர் 268 மில்லியன் யுவான் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் அவரை கைது செய்து சீன பொலிஸார் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதில் டாங் ரெஞ்சியன் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதையடுத்து அவருக்கு சாங்சுன் மக்கள் நீதிமன்றம் மரணத் தண்டை விதிக்கப்பட்டது. இருப்பினும் அவர் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டதால், மரண தண்டனையை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

காசா போர் முடிவுக்கு வருமா? இன்று டிரம்ப் – நெதன்யாகு சந்திப்பு!

இஸ்ரேல் - பலஸ்தீனம் இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் நாட்டில் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்...

சோளம் கிடைக்காததால் திரிபோஷா உற்பத்தி இடைநிறுத்தம்!

இலங்கையில் திரிபோஷா உற்பத்தி கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி முதல்...

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 22...