இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது!

Date:

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70 சதவீதம் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய (07) நாடாளுமன்ற அமர்வின் போது கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சரிடம், நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி கேள்வி எழுப்பிய போதே இந்தத் தகவல் தெரியவந்தது.

ஆண்டுதோறும் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பான விடயங்களைக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, இதன்போது முன்வைத்தார்.

அதன்படி, ஆண்டுதோறும் 20 மில்லியன் தொன் தயிர் சட்டிகளும், 15 மில்லியன் தொன் லஞ்ச் ஷீட்களும், 20 மில்லியன் தொன் பொலித்தீன் பைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனில் சுமார் 70 சதவீதம் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படுவதால், ஆண்டுதோறும் அதிக அளவு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் சுற்றுச்சூழலில் வெளியிடப்படுவதாகவும் இதனால் அவற்றைக் குறைப்பதில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும்” பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

அல் குர்ஆன் மொழிபெயர்ப்பில் தீவிரவாதக் கருத்துக்கள் உள்ளடங்கியுள்ளதாம்; தடுமாறும் உலமாக்களின் மீள்பரிசீலனைக் குழு

 -அபூ அய்மன் மதம் சார்ந்த தவறான புரிதல் என்பது அறியாமையல்ல. அவை திட்டமிட்டவகையில்...

வெலிகம பிரதேச சபையின் வெற்றிடத்துக்கு சமீர தனுஷ்க டி சில்வா நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சமீர தனுஷ்க டி சில்வா...

டெல்லி குண்டு வெடிப்பு: வெளிப்படையான, உயர் மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்- ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் வேண்டுகோள்

செங்கோட்டை வெடிச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்...

நம்பிக்கையை நசுக்கிய வரவு–செலவுத்திட்டம்: புத்தளம் மரிக்காரின் கவிதை வரிகள்!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வரவு–செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி ஒதுக்கியுள்ள நிதித்திட்டங்கள் குறித்து...