கானா தங்க மோசடியில் தொடர்பு; ஹிஸ்புல்லாஹ் எம்.பி மறுப்பு

Date:

​கானா ஊடகங்களில் வெளிவந்ததாக கூறப்பட்டு, தங்க வியாபாரத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஏமாற்றப்பட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது.

அதில் கூறப்படும் தகவல்களை முற்றிலும் மறுக்கிறோம், அதில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம் என ஹிஸ்புல்லாஹ் எம்.பி மறுப்பு தெரிவித்து ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

​உண்மையில், எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் வியாபார நோக்கத்திற்காக சவூதி அரேபியாவை சேர்ந்த நண்பர்களுடன் கானா நாட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கே சிலர் ஏமாற்ற முனைந்ததை அறிந்து உடனடியாக, இந்த ஏமாற்று நடவடிக்கை குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, ஏமாற்ற முனைந்த 11 பேரையும் பொலிசார் கைது செய்தார்கள்.

​இதனைத்தவிர, கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம்.

​அரசியல் நோக்கங்களுக்காகச் சில தகவல்கள் தவறாகவும், பிழையாகவும் பரப்பப்படுவதையிட்டு நாம் மிகுந்த வருத்தம் அடைகிறோம் எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கை குழந்தைகளுக்கு உணவளிக்க 2.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குகிறார் மைக்கேல் கோர்ஸ்.

உணவுத் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக, உலகளாவிய ஆடை வடிவமைப்பு நிறுவனமான மைக்கேல்...

அஸ்வெசும வங்கி கணக்கை திறக்காதவர்களுக்கான அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின்...

போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி!

பொலிஸாரால் அறவிடப்படும் போக்குவரத்து மீறல் அபராதங்களை ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கைகள்...

இஷாராவிற்கு உதவிய பெண் சட்டத்தரணி கைது

கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பாக பெண் சட்டத்தரணி ஒருவர் குற்றப்...