மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (01) காலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த ஆசிரியர் தற்போது மொனராகலை ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவன் பாடசாலைக்கு கையடக்கத் தொலைபேசியைக் கொண்டு வருவது தொடர்பில் கேள்வி எழுப்பிய ஆசிரியரை தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.