டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

Date:

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்த நிபந்தனைகளை ஏற்பதாக ஹமாஸ் அறிவித்திருக்கிறது.

காசா போர் முடிவுக்கு வருவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த திட்டத்தின் சில அம்சங்களை ஏற்க ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேலிய கைதிகளை விடுவிப்பது மற்றும் காசா நிர்வாகத்தை ஒப்படைப்பது போன்ற சில முக்கிய நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்றுக்கொண்டது. இருப்பினும், இத்திட்டத்தின் பல அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “டிரம்ப் தனது 20 அம்ச திட்டத்தை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ ஞாயிற்றுக்கிழமை வரை ஹமாஸுக்கு கால அவகாசம் அளித்திருந்தார். இதற்கு ஹமாஸ் தனது பதிலை வழங்கியுள்ளது. ஆனால், ஹமாஸ் கோருவது போல, மற்ற நிபந்தனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுமா? என்பது குறித்து டிரம்ப் இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை.

குறிப்பிடத்தக்க வகையில், ஆயுதங்களை கைவிட வேண்டும் என்ற இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நிபந்தனை குறித்து எந்த கருத்தையும் ஹமாஸ் தெரிவிக்கவில்லை. இந்த நிபந்தனையை ஹமாஸ் முன்னதாகவே நிராகரித்திருந்தது. காசா மீதான போர் நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம், உடனடி உதவிப் பொருட்கள் விநியோகம் போன்றவற்றை டிரம்ப் முன்மொழிந்திருந்தார்.

காசா மீதான போரை முடிவுக்கு கொண்டுவரவும், கைதிகள் பரிமாற்றம் செய்யவும், உடனடி உதவி வழங்கவும் அரபு, இஸ்லாமிய மற்றும் சர்வதேச நாடுகள் மற்றும்  டொனால்ட் டிரம்ப் எடுத்து வரும் முயற்சிகளை ஹமாஸ் பாராட்டுகிறது என்று ஹமாஸ் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது” என ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது.

Popular

More like this
Related

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக...

வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை

தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை...

இறைவரித் திணைக்களம் வரலாற்றில் மிக உயர்ந்த வரி வருவாய் வசூலை அடைந்தது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இந்த ஆண்டு அதன் வரலாற்றில் மிக...

திருகோணமலை பௌத்த சிலை விவகாரம்: தர்ம சக்தி அமைப்பினர் நேரில் ஆய்வு

திருகோணமலையில் ஏற்பட்டுள்ள பௌத்த சிலை தொடர்பான சர்ச்சை குறித்து உண்மை நிலையை...