ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் யுத்த நிறுத்த மீறல்கள்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கொலை!

Date:

காசா நகரின் ஸைத்தூன் பகுதியில் உள்ள தங்களது வீட்டை புனரமைக்கும் முயற்சியில் இருந்தவேளை, சியோனிச ஆக்கிரமிப்பு இராணுவம் அபூ ஷஃபான் குடும்பத்தின் மீது ஷெல் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 7 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த அப்பட்டமான படுகொலை, நிராயுதபாணியான பொதுமக்களை திட்டமிட்டு குறிவைக்கும் ஆக்கிரமிப்பு படையின் கொடூர முகத்தை வெளிப்படுத்துகிறது.

சமீபத்தில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, சியோனிச படை தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக பாலஸ்தீனப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி அவர்கள் கூறியதாவது:

“போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறி, ஆக்கிரமிப்புப் படை நமது மக்களை மீண்டும் மீண்டும் குறிவைக்கிறது. இது அதன் ஆக்கிரமிப்பு நோக்கங்களையே வெளிப்படுத்துகிறது.”

பாலஸ்தீனப் பிரதிநிதிகள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் மத்தியஸ்த நாடுகளை இந்த மீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் நமது மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையை நிறுத்த, ஆக்கிரமிப்பு தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

செவ்வந்தியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

நேபாளத்தில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல...

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி இன்னும் ஆரம்பக்கட்ட பரிசோதனை நிலையிலேயே உள்ளது: சுகாதார அமைச்சு

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி 'என்டோரோமிக்ஸ்' (Enteromix) தொடர்பான பரபரப்பான கூற்றுகளுக்கு எதிராக...

மார்பக புற்று நோயால் ஒரு நாளைக்கு மூவர் உயிரிழப்பு!

இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் அதிகப்படியான பெண்கள் மார்பகப் புற்று நோயினால்...

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து இந்தியா பிரதமருடன் பிரதமர் ஹரிணி கலந்துரையாடல்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,...