காசாவில் மஞ்சள் நிற கடவைகளை நிறுவியுள்ள இஸ்ரேல் இராணுவம்..!

Date:

போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து இஸ்ரேலிய இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்களின் கீழ் உள்ள தனது பகுதிகளை பிரித்து காட்டுவதற்காகவும் பலஸ்தீனர்களுக்கு நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்ட பிரதேசங்களை அடையாளப்படுத்துவதற்காகவும் மஞ்சள் நிறத்திலான கடவைகளை நிறுவியுள்ளது.

இந்த எல்லையை தாண்டுவோர் படுகொலை செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது.

இவை காசாவின் பல இடங்களில்,  எல்லைச் சுவர்களிலும் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இஸ்ரேல் இராணுவம் தங்களின் “கட்டுப்பாட்டு எல்லையை” தெளிவுபடுத்தி, பலஸ்தீனர்களின் இயக்கத்தைத் தடை செய்ய முயற்சி செய்கிறது எனக் கூறப்படுகிறது.

இதனால் காசா மக்களிடையே மிகுந்த பதற்றம் நிலவுகிறது. ஏற்கனவே போர் தாக்குதல்களால் வீடுகள் அழிந்த நிலையில், இஸ்ரேல் இராணுவத்தின் புதிய “மஞ்சள் எல்லை” நடவடிக்கை பலஸ்தீனர்களின் சுதந்திரமான நடமாட்ட உரிமையைப் பறிக்கும் முயற்சி என மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...