கொழும்பு 01 முதல் 15 வரை பல பகுதிகளுக்கு நாளைய தினம் (23) நீர் விநியோகம் தடைப்படும் என்று நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாளை (23) காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 10 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரைப் பெறும் பிரதான பம்பிங் நிலையத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதால், பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவதுகொட, கோட்டே, ராஜகிரிய, மடிவெல, நுகேகொட, நாவல கொலன்னாவ, ஐடிஹெச் கொட்டிகாவத்த, அங்கொட வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, மஹரகம, பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.