கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

Date:

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரியை பிணையில் விடுதலை செய்ய கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (13) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் தொடர்புடைய வழக்கு விசாரணைக்கு வந்தபோதே கல்கிஸ்ஸ நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அங்கு முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பின்னர், கல்கிசை நீதவான் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியை தலா ரூ. 100,000 சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

இச்சம்பவம் நடந்த நேரத்தில் சட்டத்தரணி, பொலிஸ் அதிகாரியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக அறிக்கை மூலம் பொலிஸ் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்துள்ளது.

மேலும் உண்மைகளை தெரிவிக்கும் விதமாக, சட்டத்தரணி இன்னும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிக்கவில்லை என்று பொலிஸ் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...