சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

Date:

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஹரிணி அமரசூரிய இன்று காலை சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்துள்ளார்.

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்றிரவு நாட்டில் இருந்து புறப்பட்டிருந்தார்.

இன்று காலை சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்த பிரதமருக்கு
சீன வானொலி மற்றும் தொலைக்காட்சிக்கான இணை அமைச்சர் காவ் சுமின் வரவேற்றார்.

பயணத்தின் முதல் நாளான இன்று பிரதமர் தடைசெய்யப்பட்ட நகரம் மற்றும் சீனப் பெருஞ்சுவரைப் பார்வையிட்டார்.

எதிர்வரும் நாட்களில், பிரதமர் 2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கியாங் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

பீஜிங்கில் நடைபெறவுள்ள மாநாடானது, “பகிரப்பட்ட ஓர் எதிர்காலம் பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயல்முறை” என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

பிரதமர் ஹரினி அமரசூரியவின் விஜயத்தின் போது, பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளடக்கிய கொள்கை சீர்திருத்தங்களில் இலங்கையின் முன்னேற்றத்தை எடுத்துரைக்கும் முக்கிய உரை ஒன்றை நிகழ்த்த உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...