ஜனாதிபதி – IMF பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல்!

Date:

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுள்ளது.

குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று (07) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆறாவது தவணை வெளியிடப்படுவதற்கு முன்னர் நடைபெறும் ஐந்தாவது இடைக்கால மதிப்பாய்வின் கட்டத்தை முன்னிட்டு இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இதேவேளை, பொருளாதார சரிவு நிலையிலிருந்து நாட்டை மீட்டு வளர்ச்சி நிலை நோக்கி கொண்டு செல்வதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்றும், அதற்கான ஒரு மூலோபாய திட்டம் அரசாங்கத்திடம் உள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்ததுடன் அந்த திட்டத்தை வெற்றிகரமாக மாற்றுவதில் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆதரவை தாம் பெரிதும் பாராட்டுவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

மேலும் பொருளாதார மறுமலர்ச்சியை அடையக்கூடிய நாடாக இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு, சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த இலக்குகளை தாண்டிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் இனங்கண்டுள்ளதாகவும், அதற்காக அரசாங்கம் ஒரு முறையான திட்டத்தை வகுத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பொருளாதார மறுமலர்ச்சியை அடைவதற்கான இலக்கை அடைய, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை மேலும் அழைப்பது அவசியம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக நாட்டில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...