போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் 30ஆம் திகதி ஆரம்பம்

Date:

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை (30) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

‘தேச ஒருமைப்பாடு  தேசிய இயக்கம்’ என்ற தொனிப்பொருளில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதுதொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சுகததாச மைதானத்தில் நடைபெறவுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை, மாவட்ட சபைகள், பிராந்திய சபைகள், மற்றும் பொதுப்பாதுகாப்புக் குழுக்கள் ஆகிய நான்கு முக்கிய துறைகள் ஒன்றிணைந்து இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளன.

பொலிஸாரின் தரவுகளுக்கு அமைவாக கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் 1,482 கிலோ 820 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பில் 59,243 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு 2,542 கிலோ 454 கிராம் ஐஸ் கைப்பற்றப்பட்டுள்ளதோடு 67,762 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 582 கிலோ 136 கிராம் ஹஷிஷ் போதைப்பொருள் கைபற்றப்பட்டதுடன் 1,444 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று 14,434 கிலோ 468 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு 59,482 பேர் கைது செய்யப்பட்டதுடன் 32 கிலோ 642 கிராம் கொகைனும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு 86 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 39,617 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதோடு அவற்றை விநியோகித்த 2,921 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்!

திட்வா புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு...

இஸ்லாமிய இலக்கியம்: அரபு எண்களின் தோற்றமும் பரவலும்!

-பொறியாளர் எஸ்.எம்.எம். ரிஃபாய் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் எண்கள் தவிர்க்க முடியாதவை....

போதைப்பொருள் பாவனையாளர்களைக் கண்டறிய இன்று முதல் புதிய முறை!

போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளைக் கண்டறியும் உமிழ்நீர் பரிசோதனை இன்று (17) முதல்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை.

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும்...