விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது

Date:

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா இன்று (23) வியாழக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான தம்மிக்க பட்டபெந்தி, சுனில் ஹந்துன்னெத்தி, சுற்றாடல் பிரதி அமைச்சர் அண்டன் ஜயகொடி மற்றும் சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சுயாதீன ஊடகவியலாளராக தமிழன் பத்திரிகையில் இவர் தொடர்ச்சியாக எழுதி வருகின்ற சுற்றாடல் கட்டுரைகளுக்காகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் கடந்த வருடமும் ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு ஜனாதிபதி சுற்றாடல் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இன்றையதினம் (24) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி எம்.ஏ.) அவர்களுக்கான கௌரவிப்பு விழா.!

அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் செயலாளராகவும் உபதலைவராகவும்...

உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்: மாபெரும் இரத்த தானம் நிகழ்வு!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் சுமார் 13 பில்லியன் டொலர்களாக உயர்வு!

2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை...