உலக உணவு தினம்: உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விவசாயத்தை ஊக்குவித்து வரும் சவூதி அரேபியா

Date:

எழுத்து : காலித் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

ஆண்டுதோரும் ஒக்டோபர் 16ஆம் திகதி உலக உணவு தினமாக கொண்டாடப்படுகிறது.

இது, உடவுப் பற்றாக்குறையை எதிர்த்துப் போராடுவதற்கும், உணவுப் பாதுகாப்பை அடைவதற்கும், உலகம் முழுவதும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் சர்வதேச உறுதிப்பாட்டைப் புதுப்பிப்பதற்குமான ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும்.

இந்த சந்தர்ப்பம் உணவு என்பது ஒரு அன்றாடத் தேவை மட்டுமல்ல, இது ஒரு அடிப்படை மனித உரிமை, சமூக ஸ்திரத்தன்மை, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் தூண் என்பதை வலியுறுத்துவதற்கான ஒரு வாய்ப்பைப் பிரதிபலிப்பதாகக் காணப்படுகிறது.

சவூதி அரேபியாவின் “விஷன் 2030 ” இன் முக்கிய குறிக்கோள்களில், உணவுப் பாதுகாப்பை அடைந்து கொள்வதும் ஒன்றாகும்.

மேலும் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அதன் வளர்ச்சி மற்றும் மனிதாபிமானக் கொள்கையின் முன்னுரிமையாகும். சமீபத்திய ஆண்டுகளில், 2030 ஆம் ஆண்டுக்குள் விவசாயத்தில் நீர் திறனை 50 சதவீதம் அதிகரிப்பது, உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள் மற்றும் துல்லியமான விவசாயத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், உணவுப் பொருட்களின் கிடைக்கும் தன்மையை உறுதி செய்தல் மற்றும் விநியோகச் சங்கிலிகளை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலையான விவசாயத் திட்டங்களில் சவூதி அரேபியா முதலீடு செய்துள்ளது.

சவூதி அரேபியா தேசிய உணவுப் பாதுகாப்பு உத்தியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பல அடிப்படை விவசாயப் பொருட்களில் தன்னிறைவை அடைவதையும், பல்வேறு மற்றும் நிலையான உணவுப் பொருட்களைப் பெறுவதற்காக வெளிநாடுகளில் விவசாய முதலீடுகளை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சர்வதேச அளவில், மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி உதவிகளை வழங்கும் உலகின் மிகப்பெரிய நன்கொடை வழங்கும் நாடுகளில் ஒன்றாக சவூதி அரேபியா விளங்குகிறது. அதன் உதவிகள் அமெரிக்கா டொலர் $130 பில்லியனுக்கும் அதிகமானதாகும். இதில் பெரும்பகுதி மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief) மூலம் உலகம் முழுவதும் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்புடன் (FAO) இணைந்து, விவசாயிகளை ஆதரிப்பதற்கும், வளர்முக நாடுகளில் விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், மோதல்கள் மற்றும் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் கூட்டுத் திட்டங்களை இந்த மையம் செயல்படுத்தியுள்ளது.

உணவுப் பாதுகாப்பு என்பது சுற்றுச்சூழல் மற்றும் நீர் பாதுகாப்புடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது என்று சவூதி அரேபியா நம்புகிறது.

எனவே, சவூதி அரேபியாவில்10 பில்லியனுக்கும் அதிகமான மரங்களை நடுவதை நோக்கமாகக் கொண்ட “சவூதி பசுமை முயற்சி” மற்றும் பிராந்தியத்தில் 50 பில்லியனுக்கும் அதிகமான மரங்களை நடுவதை நோக்கமாகக் கொண்ட “மத்திய கிழக்கு பசுமை முயற்சி” போன்ற முக்கிய முன் முயற்சிகளை அது தொடங்கியுள்ளது.

இந்த முயற்சிகள் பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கும், சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும், மண்ணின் தரத்தை மேம்படுத்துவதற்கும், கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் பங்களிக்கின்றன. அவ்வாறே, உலகளாவிய உணவு நிலைத்தன்மையை மேம்படுத்தவும் பங்களிப்புச்செய்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில், சவூதி அரேபியாவின், உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் அதன் சர்வதேச பங்காளிகளுடனான நெருங்கிய ஒத்துழைப்பானது, மிகவும் நியாயமான, நிலையான மற்றும் மீள்தன்மை கொண்ட உலகளாவிய உணவு முறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பசியை ஒழிப்பது என்பது ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் ஒருங்கிணைந்த விருப்பங்களுக்குத் தேவையான ஒரு கூட்டுப் பொறுப்பாகும். உணவு என்பது மனித கண்ணியத்தின் அடித்தளமாகும், மேலும் அதில் முதலீடு செய்வது அனைத்து மனிதகுலத்தின் எதிர்காலத்தில் செய்யப்படும் ஒரு முதலீடாகும்.

முடிக்குரிய இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆல் ஸுஊத் வலியுறுத்துவதுபோல், அனைத்து மனிதகுலத்திற்கும் வளமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்காக மக்களின் முயற்சிகள் ஒருங்கிணைக்கப்படும்போது மட்டுமே உண்மையான வளர்ச்சியை அடைய முடியும்.

இது மிகவும் சமமான, நிலையான மற்றும் ஊட்டமளிக்கப்பட்ட உலகத்தை உருவாக்குவதற்கான அதன் நடைமுறை மற்றும் மனிதாபிமான உறுதிப்பாட்டின் மூலம் இன்று சவூதி அரேபியாவினால் உருவகப்படுத்தப்பட்ட ஒரு தொலைநோக்குப் பார்வையாகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...