அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமா, மஸ்ஜித் சம்மேளனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் விசேட கலந்துரையாடல்

Date:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமைக் காரியாலயத்தில் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் தொடர்பான விசேட ஒன்றுகூடல் ஒன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனங்களின் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை, வெள்ளப் பாதிப்புகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் அவசர தேவைகள் ஆகியவற்றை முன்னிட்டு, உடனடியாக எவ்வாறு பயனுள்ள பங்களிப்புகளை வழங்கலாம் என்பது விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுடன் இணைந்து செயல்படுவது, உதவி பொருட்கள் விநியோகம், தங்குமிட வசதிகள், உணவு மற்றும் மருத்துவ ஆதரவு வழங்கும் முறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சமூக ஒருமைப்பாட்டும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளும் தற்போது மிக அவசியமானவை என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...