இலங்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்திக்கிறேன்: தமிமுன் அன்சாரி அறிக்கை

Date:

டிட்வா புயல் மற்றும் இடைவிடா கனமழையால் இலங்கை முழுவதும் ஏற்பட்ட பெரும் சேதங்களையும், வெள்ளப் பாதிப்புகளையும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் காணும் போது ஆழ்ந்த வேதனை ஏற்படுகிறது என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மு. தமிமுன் அன்சாரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர்,

“இந்த பேரிடரால் பல குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். வீடுகள், சொத்துகள், வாழ்வாதாரம் ஆகியவை இழந்த மக்களின் துயரத்தை நாங்கள் நெருக்கமாக உணர்கிறோம்.

இந்த கடினமான நேரத்தில் இலங்கை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்,” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகள் விரைவாக கிடைக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேரிடர் நெருக்கடியில் சிக்கிய இலங்கை மக்களுக்கு தனது பிரார்த்தனைகள், ஆதரவு மற்றும் மனிதநேய ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்குவதாக அன்சாரி அவர்கள் உறுதியளித்துள்ளார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...