இலங்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்திக்கிறேன்: தமிமுன் அன்சாரி அறிக்கை

Date:

டிட்வா புயல் மற்றும் இடைவிடா கனமழையால் இலங்கை முழுவதும் ஏற்பட்ட பெரும் சேதங்களையும், வெள்ளப் பாதிப்புகளையும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் காணும் போது ஆழ்ந்த வேதனை ஏற்படுகிறது என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மு. தமிமுன் அன்சாரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர்,

“இந்த பேரிடரால் பல குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். வீடுகள், சொத்துகள், வாழ்வாதாரம் ஆகியவை இழந்த மக்களின் துயரத்தை நாங்கள் நெருக்கமாக உணர்கிறோம்.

இந்த கடினமான நேரத்தில் இலங்கை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்,” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகள் விரைவாக கிடைக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேரிடர் நெருக்கடியில் சிக்கிய இலங்கை மக்களுக்கு தனது பிரார்த்தனைகள், ஆதரவு மற்றும் மனிதநேய ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்குவதாக அன்சாரி அவர்கள் உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம் முன்னுரிமை!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து நாடு எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க,...

சீரற்ற வானிலையால் சுமார் 1000 பாடசாலைகள் பாதிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 9 மாகாணங்களிலும் சுமார் ஆயிரம் பாடசாலைகள்...

காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தினமும் மீறுகிறது: துருக்கி, எகிப்து குற்றச்சாட்டு.

காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதும், அங்கே போர் மேகங்கள்...

பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை அனுபவித்தால் 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை அனுபவித்தால், தேசிய மனநல நிறுவனத்தின் 1926...