இலங்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்திக்கிறேன்: தமிமுன் அன்சாரி அறிக்கை

Date:

டிட்வா புயல் மற்றும் இடைவிடா கனமழையால் இலங்கை முழுவதும் ஏற்பட்ட பெரும் சேதங்களையும், வெள்ளப் பாதிப்புகளையும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் காணும் போது ஆழ்ந்த வேதனை ஏற்படுகிறது என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மு. தமிமுன் அன்சாரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர்,

“இந்த பேரிடரால் பல குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். வீடுகள், சொத்துகள், வாழ்வாதாரம் ஆகியவை இழந்த மக்களின் துயரத்தை நாங்கள் நெருக்கமாக உணர்கிறோம்.

இந்த கடினமான நேரத்தில் இலங்கை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்,” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகள் விரைவாக கிடைக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேரிடர் நெருக்கடியில் சிக்கிய இலங்கை மக்களுக்கு தனது பிரார்த்தனைகள், ஆதரவு மற்றும் மனிதநேய ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்குவதாக அன்சாரி அவர்கள் உறுதியளித்துள்ளார்.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...

பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...