ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

Date:

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR) போசகருமான அமீர் அஜ்வத், 2025ஆம் ஆண்டுக்கான பியர்சன் எடெக்செல் சர்வதேச தேர்வுகளில் உலகிலேயே அதிக மதிப்பெண்கள் பெற்ற ஏழு மாணவர்களை கௌரவித்து பாராட்டினார்.

இந்த சிறப்புவிழா 21ஆம் திகதி பாடசாலையின் வருடாந்திர பரிசளிப்பு நிகழ்வின் போது நடைபெற்றது.

சாதனை படைத்த” மாணவர்கள் அராஷ் எம்ரே அன்பாஸ் (iPrimary English), யஹ்யா முகமது மின்ஹாஜ் (iPrimary Mathematics), அம்னா முகமது இஹ்சான் (IGCSE Mathematics A), ரோஸ்மி இஸ்மத் ஷனீஸ் (IGCSE Mathematics A), அருஷன் ரத்னேந்திரன் (IAS Business), அகமது மாசின் முகமது முனாஸ் (IAS Economics) மற்றும் மஹாரம்ப மகா ஆச்சாரிகே மெனுலா போசிலு மஹாரம்பகே (IAS Economics) ஆகியோராவர்.

மேலும், மத்திய கிழக்கு மற்றும் சவூதி தேசிய மட்டத்தில் பல்வேறு பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 11 மாணவர்களும், 52 சிறந்த சாதனையாளர்களும் இந்த நிகழ்வில் பாராட்டப்பட்டனர்.

தூதர் அமீர் அஜ்வத், SLISR மாணவர்களின் இந்த உலகத் தரச் சாதனை 2024–2025 கல்வியாண்டை பள்ளியின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக மாற்றியுள்ளதாகவும், மத்திய கிழக்கில் மிகச் சிறந்த செயல்திறன் கொண்ட பாடசாலையாக SLISR உருவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை–சவூதி அரேபியா இராஜதந்திர உறவுகளின் 50ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், சவூதி அரேபியா வெளியிட்ட அஞ்சல் முத்திரை அடங்கிய சிறப்பு நினைவுப் பரிசையும் தூதர் மாணவர்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்வில், தனியார் பள்ளிகளின் தலைமை மேற்பார்வையாளர் டாக்டர் மொஹ்சின் அப்துல்லா அல் கரானி, KSA கல்வி அமைச்சக அதிகாரிகள், ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் அமைச்சர்/தலைவர் முகமது அனஸ், SLISR பாடசாலை முதல்வர் டாக்டர் ருக்ஷன் ரசாக், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....