இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம் முன்னுரிமை!

Date:

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து நாடு எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க, இலங்கை விடுத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் விரைவான நிதி (RFI) கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) முடிவு செய்துள்ளது.

அவசர நிதியுதவிக்கான இலங்கை அதிகாரிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, தற்போதைய சூழ்நிலையில் விரைவான நிதி கருவி (RFI) கோரிக்கையை முன்னுரிமையாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு பரிசீலிக்கும் என்று IMF ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது.

RFI இன் கீழ் வழங்கப்படும் ஆதரவு இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி அணுகலுடன் கூடுதலாகும் என்று IMF குறிப்பிட்டது.

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) 5 ஆவது மீளாய்வினை நிறைவு செய்வதற்கான விவாதங்களை மீண்டும் தொடங்க 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் IMF குழு இலங்கைக்கு வருகை தர உள்ளது.

மீளாய்வின் முடிவில் நாடு சுமார் 358 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறும் என்றும் IMF குறிப்பிட்டது.

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...