கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்து முசலியில் ஆர்ப்பாட்டம்!

Date:

முசலி பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றமையை கண்டித்து இன்று (31) முசலி பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர் சிலாபத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் தாக்கியவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

அரசாங்கத்தின் அனர்த்தம் தொடர்பான அறிவித்தலுக்கு அமைய செயற்படும்போது போதுமக்களால் தாம் தாக்கப்படுகின்றோம், அறிவித்தலுக்கு மாற்றமாக நாம் எவ்வாறு செயற்படுவது.

எனவே, எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என முசலி பிரதேச கிராம உத்தியோகத்தர் சங்கய்தின் தலைவர் ப. அஸீம் தெரிவித்தார்.

இவ்வாறு எமது உத்தியோகத்தர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். எனவேதான் நாம் இந்த ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...