கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு அதிவேக நெடுஞ்சாலை வருமானம் 25% அதிகரிப்பு!

Date:

கிறிஸ்மஸ் தினத்தன்று அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக 54 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

நேற்று (25) ஒரு இலட்சத்து 46 ஆயிரம் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கிறிஸ்மஸ் தினத்திற்கு முந்தைய நாள் அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் 25 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

அதன்படி, முன்தினம் (24) 61 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சாதாரண ஒரு நாளில் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாகக் கிடைக்கும் வருமானம் 45 மில்லியன் ரூபாவாகும்.

அத்துடன் சாதாரண நாளொன்றில் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒரு இலட்சத்து 45 ஆயிரம் வாகனங்கள் பயணிப்பதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல் !

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 21வது ஆண்டு நினைவை முன்னிட்டு, இன்றைய தினம்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அல் இஹ்சான் அமைப்பினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் பிற பகுதிகளில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு...

மண்சரிவினால் சேதமடைந்த 8 வைத்தியசாலைகளை வேறு இடங்களில் மீள நிறுவ நடவடிக்கை!

மண்சரிவினால் சேதமடைந்த 8 வைத்தியசாலைகளை வேறு இடங்களில் மீள நிறுவுவதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு...

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை முதலிடம்!

ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான யானைகள் இறக்கும் இலங்கை, தெற்காசியாவிலேயே அதிக யானை...