கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு அதிவேக நெடுஞ்சாலை வருமானம் 25% அதிகரிப்பு!

Date:

கிறிஸ்மஸ் தினத்தன்று அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக 54 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

நேற்று (25) ஒரு இலட்சத்து 46 ஆயிரம் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கிறிஸ்மஸ் தினத்திற்கு முந்தைய நாள் அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் 25 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

அதன்படி, முன்தினம் (24) 61 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சாதாரண ஒரு நாளில் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாகக் கிடைக்கும் வருமானம் 45 மில்லியன் ரூபாவாகும்.

அத்துடன் சாதாரண நாளொன்றில் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒரு இலட்சத்து 45 ஆயிரம் வாகனங்கள் பயணிப்பதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...