தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

Date:

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

டெங்கு, சிக்குன்குனியா மற்றும் லெப்டோஸ்பிரோசிஸ் பரவுவதற்கான கடுமையான ஆபத்து இருப்பதாக சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட குறிப்பிட்டார்.

நாட்டைப் பாதித்த அண்மைய அவசரகால பேரிடர் சூழ்நிலை காரணமாக, வரும் நாட்களில் கடுமையான தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளன.

அதன்படி, டெங்கு, சிக்குன்குனியா மற்றும் லெப்டோஸ்பிரோசிஸ் பரவுவதற்கான அதிக ஆபத்து உள்ளது.

மேலும், தொற்றாத நோய் நிலைகளில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

 

குறிப்பாக, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் சிகிச்சை இப்போது சீர்குலைந்துள்ளது.

 

பேரிடர் சூழ்நிலை காரணமாக அவர்களின் மருந்துகள் காணாமல் போயிருக்கலாம்.

எனவே, இந்த நோயாளிகளுக்கு நாங்கள் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றோம் – என்றார்.

Popular

More like this
Related

இஸ்ரேல் சட்டங்களை மீறியமைக்காக 9 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்!

இஸ்ரேலின் நடைமுறையிலுள்ள குடிவரவு சட்டங்களை மீறியமைக்காக கைது செய்யப்பட்ட 9 இலங்கை பிரஜைகள்,...

இந்தியாவின் RAW மற்றும் RSS மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க பரிந்துரை: அமெரிக்க ஆணையத்தின் அதிரடி அறிக்கை!

இந்தியாவில் மத சுதந்திரம் கடுமையாக மீறப்படுவதாகக் கூறி, இந்தியாவின் உளவு அமைப்பான...

7வது ஆண்டாக மத நல்லிணக்கத்தை பறைசாற்றிய கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம விகாரையின் இப்தார் நிகழ்வு!

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பறைசாற்றும் வகையில், கொழும்பு கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம...

நல்லிணக்கம், சகவாழ்வு கலாசாரத்தை நோக்கிய தேசிய இளைஞர் இப்தார் நிகழ்வு

சமூகத்தின் பிரதான அங்கமாக இருக்கின்ற இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்பும்...