தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் தரையிறக்கம்

Date:

கொழும்பில் இருந்து இஸ்தான்புல் நோக்கிச் சென்ற துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் TK 733, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதிகாலை 12:28 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பாக தரையிறங்கியது.

இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட இந்த பயணிகள் விமானம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையிறங்கும் சாதனம் (Landing Gear) செயலிழந்ததாக அறிவித்தது. இதனையடுத்து அவசரகால நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.

முன்னெச்சரிக்கை அவசரகாலத் தரையிறக்கத்திற்கு முன்னதாக எரிபொருளைக் குறைப்பதற்காக (burn fuel) விமானம் வானில் சுற்றிக்கொண்டிருந்தது.

விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் மருத்துவ அவசரகாலக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. விமானக் குழுவினர் நிலையான அவசரகால நெறிமுறைகளைப் பின்பற்றி வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருந்தனர்.

துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தின் அவசர நிலைமை இருந்தபோதிலும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மற்ற விமானங்களின் சேவைகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

டிஜிட்டல்மயமாகும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்

அரசாங்கத்தின் “டிஜிட்டல் ஶ்ரீ லங்கா” தேசிய கொள்கைக்கு அமைவாக, முஸ்லிம் சமய...

துருக்கியில் மாபெரும் இஸ்லாமியப் பல்கலைக்கழகம்.

துருக்கியின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான இஸ்தான்புல்லின் சுல்தான் அஹ்மட் பிரதேசத்தின் மையத்தில்...

அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் சம்பளப் பிரச்சினை குறித்து பிரதமருடன் கலந்துரையாடல்!

அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக,...

அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை

கிழக்கிலிருந்தான ஒரு மாறுபடும் அலை காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு...