நாச்சியாதீவு மக்களுக்கு சிங்கள சகோதரர்களது மனிதாபிமான உதவி

Date:

நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் அனுராதபுர மாவட்டத்தின் பெரிய கிராமங்களில் ஒன்றான நாச்சியாதீவில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக இன்று அனுராதபுர மாவட்டத்தின் தலாவ மகாவலி H பகுதியைச் சேர்ந்த சிங்கள சகோதரர்கள் 600 உணவுப் பார்சல்களை தயாரித்து எடுத்து வந்து ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்கள்.

அவர்களை தமது காரியாலயத்தில் வரவேற்ற நிர்வாகிகள் அவர்களுக்கு சிற்றுண்டிகளை வழங்கி கெளரவித்ததுடன் நன்றி தெரிவிப்பதற்காக விசேட கூட்டம் ஒன்றையும் நடத்தி அந்த பார்சல்களை ஊரில் சிறப்பாக பங்கீடு செய்தார்கள்.

இந்த சிங்கள சகோதரர்களது இந்த நடவடிக்கை இன நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இன ரீதியாக சிந்திக்கும் ஒரு சிறு குழுவினர் இந்த நாட்டில் இருப்பது போன்றே மனிதாபிமான அடிப்படையில், இன நல்லுறவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சிந்திக்கும் சிங்கள சகோதரர்களும் இந்த நாட்டில் வாழுகிறார்கள் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

‘Rebuilding Sri Lanka’ நிதியத்தில் வெளிநாட்டு வைப்பீடுகள் அதிகரிப்பு

‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உருவாக்கப்பட்டுள்ள ‘Rebuilding...

நாட்டிலிருந்து புறப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர்!

ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் தங்கள் பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர்,...

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ...

ரயில் பருவச் சீட்டுக்களில் பஸ்களில் பயணிக்க வாய்ப்பு

நாட்டில் நிலவும் இயற்கை அனர்த்த நிலையில் பொது மக்களின் நலன் கருதி...