பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

Date:

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தில் தூதரகம் மற்றும் விசா சேவைகளை பங்களாதேஷ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தூதரகம் இன்று (23) வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பங்களாதேஷுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் பிரணய் வர்மா, டாக்காவில் உள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு, இந்தியா முழுவதும் அமைந்துள்ள தூதரகங்களில் உள்ள பங்களாதேஷ் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.

இதற்கிடையில், அடுத்த ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திதி திட்டமிடப்பட்ட தேர்தலை சரியான நேரத்தில் நடத்த நாடு தயாராக உள்ளதாக பங்களாதேஷ் தலைமை ஆலோசகர் மொஹமட் யூனுஸ், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றும் செர்ஜியோ கோரிடம் கூறினார்.

இதனிடையே, மாணவர் தலைவர் ஷெரீப் ஒஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கை பராமரிக்கத் தவறியதற்காக மொஹமட் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார்.

டிசம்பர் 12 அன்று இளைஞர் தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பங்களாதேஷில் மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

அவரது மரணம் நாடு முழுவதும் போராட்டங்களைத் தூண்டியது. டாக்காவில் முன்னணி செய்தித்தாள் அலுவலகங்களிலும் ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரின் வீட்டிலும் தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சட்டோகிராமில் உள்ள இந்தியாவின் உதவி உயர் ஆணையரின் இல்லமும் தாக்கப்பட்டிருந்தது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...