வெளிநாட்டு இலங்கையர்களின் பங்களிப்பு அதிகரிப்பு: நவம்பரில் 673.4 மில். டொலர் பதிவு

Date:

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம், நவம்பர் மாதத்தில் 673.4 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வந்த மொத்த பண அனுப்பல் 7.19 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இது 20.7 சதவீத அதிகரிப்பு எனவும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வளர்ச்சி, நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு நிலையை வலுப்படுத்துவதோடு, பொருளாதார மீட்புக்கு வெளிநாட்டு தொழிலாளர்களின் பங்களிப்பு தொடர்ந்தும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...