அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (டிசம்பர் 4) முதல் மீண்டும் கட்டணம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிலவிய மோசமான காலநிலை காரணமாக கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக எவ்வித கட்டணமும் அறவிட வேண்டாம் என வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
