கார் விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அசோக ரன்வல கைது

Date:

கார் விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் சபாநாயகரும், பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து நடந்த நேரத்தில் அவர் மதுபோதையில் இருந்ததாக சிலர் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியிட்டன. ஆனால் விசாரணையில் அவர் மதுபோதையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

முன்னாள் சபாநாயகரும், பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி, கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் இவ்விபத்துடன் தொடர்புபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் ஜீப் வண்டியில் பயணித்த பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (11) இரவு சப்புகஸ்கந்த, தெனிமல்ல பிதேசத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில் காரில் பயணித்த 25 வயது பெண், அவரது 6 மாத குழந்தை, 55 வயது மற்றுமொரு பெண் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தை மேலதிக சிகிச்சைக்காக லேடிடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை ஜனவரியில்..!

2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சையை நடத்துதல் தொடர்பாக இலங்கை பரீட்சை...

முன்மாதிரியான மக்கள் பிரதிநிதியாக இருந்தால், அனைத்து சலுகைகளையும் மக்களுக்கே அர்ப்பணிக்க வேண்டும் – முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷாம் நவாஸ்.

டிட்வா சூறாவளி தாக்கத்தால் முழு இலங்கையும் கடுமையான நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. பல்வேறு...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோரின் நீர், மின் கட்டணங்களை தள்ளுபடி செய்யுமாறு ரவூப் ஹக்கீம் ஜனாதிபதிக்கு கடிதம்.

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் டிசம்பர்...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான டிசம்பர் மாத ஊட்டச்சத்து கொடுப்பனவு.

தற்போது நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு,...