கார் விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அசோக ரன்வல கைது

Date:

கார் விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் சபாநாயகரும், பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து நடந்த நேரத்தில் அவர் மதுபோதையில் இருந்ததாக சிலர் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியிட்டன. ஆனால் விசாரணையில் அவர் மதுபோதையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

முன்னாள் சபாநாயகரும், பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி, கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் இவ்விபத்துடன் தொடர்புபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் ஜீப் வண்டியில் பயணித்த பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (11) இரவு சப்புகஸ்கந்த, தெனிமல்ல பிதேசத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில் காரில் பயணித்த 25 வயது பெண், அவரது 6 மாத குழந்தை, 55 வயது மற்றுமொரு பெண் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தை மேலதிக சிகிச்சைக்காக லேடிடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...

சிறுவர்களுக்கான அன்றாட துஆக்கள் மற்றும் ஒழுக்கங்கள்: மும்மொழிகளில் புதிய நூல் வெளியீடு!

பிள்ளைகள் அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள் மற்றும் அவர்கள் கடைப்பிடிக்க...