2025 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணைக்கான 6 முதல் 10 ஆம் தரங்களுக்கான தவணைப் பரீட்சை நடத்தப்படாது என்று மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முன்னர் வழங்கப்பட்ட வழிமுறைகளை செயல்படுத்துமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தொடர்புடைய அதிகாரிகளுக்கு, குறிப்பாக அனைத்து அதிபர்களுக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை அடுத்த தரங்களுக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 11 ஆம் தர மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சையை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
