பாகிஸ்தான் கடல்சார் விவகாரங்களுக்கான அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

Date:

பாகிஸ்தான் கடற்றொழில் மற்றும் (பெட்ரல் ) உள்ஆட்சி அமைச்சர் மொஹமட் ஜுனைத் அன்வர் சௌத்ரி  இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அமைச்சர் மொஹமட் ஜுனைத் இன்று செவ்வாய்க்கிழமை (09) கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.

இலங்கை-பாகிஸ்தான் சுதந்திரமடைந்த காலத்திலிருந்து நட்புறவைக் கொண்டுள்ள நாடு, இலங்கை ஊடகவியலாளர்கள் பாகிஸ்தான் நாட்டுக்கு வருகைத்தருமாறு அழைப்பு விடுத்தார்.

அத்துடன் கடந்த வாரம் இலங்கையில் ஏற்பட்ட போரிடரினால் இலங்கைக்கு பாகிஸ்தான் உடனடி நிவாரணங்களை உடன் வழங்கியது. பாகிஸ்தான் இலங்கைக்கு உடனடி நிவாரணங்களையும் தொடர்ந்து வழங்கி வருகின்றது.

ஏற்கனவே பாகிஸ்தான் விமானம் மூலமும் 200 டொன் உடன் நிவாரணப் பொருட்கள் கடல் மார்க்கமாக பாலங்கள், வள்ளங்கள், பிளங்கெட், கூடாரங்கள் பாய்கள் நுளம்பு வலைகள், பால் பெட்டிகள் மருந்துப் பொருட்களை உடனடி நிவாரணமாக வழங்கி வைத்தது.

அத்துடன் பாகிஸ்தான் இராணுவ குழு ஒன்றும் இவ் நிவாரணப் பணிகளில் இலங்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஸீஸும் கலந்து கொண்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில்..!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை...

அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவி: வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்.

நாட்டில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தத்தால் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த வாகனங்கள்...

பலத்த மின்னல் தாக்கம்: வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை.

மேற்கு, சபரகமுவ, தெற்கு மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் கடுமையான மின்னலுக்கான செம்மஞ்சள்...

ஆடை விற்பனை நிலையத்தில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் சிசிரிவி கமரா: உரிமையாளர் கைது!

மஹரகம - தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில்...