ரயில் பருவச் சீட்டுக்களில் பஸ்களில் பயணிக்க வாய்ப்பு

Date:

நாட்டில் நிலவும் இயற்கை அனர்த்த நிலையில் பொது மக்களின் நலன் கருதி ரயில்வே மாதாந்த பருவச்சீட்டை இலங்கை போக்குவரத்து சபை பஸ்களிலும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ரயில் பயணத்திற்கான பருவச் சீட்டை  இ.போ.ச பஸ்களில் காட்டி தமது பயணத்தைத் தொடர முடியும் என   இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இலங்கை போக்குவரத்து சபையின் அதி சொகுசு பஸ்கள் தவிர்ந்த ஏனைய சாதாரண பஸ்களில் ரயில்வே மாதாந்த பருவச்சீட்டைப் பயன்படுத்தி போக்குவரத்து  நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை  மேலும் தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

விவாகரத்து மற்றும் முஸ்லிம் திருமணச் சட்டம் தொடர்பான இரண்டு தனிநபர் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

இலங்கையின் தனிநபர் சட்டங்களை நவீனமயமாக்கும் நோக்கில், ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ அனுஷ்டிப்பு

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு...

கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்.

20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறும் காலப்பகுதியில்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் 50 மி.மீ. இற்கும் அதிக மழைக்கு சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...