பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

Date:

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். மாவட்ட செயலாளர்கள் ஊடாக இதற்கென மாற்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன் குறுகிய காலத்திற்குள் அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அனர்த்தங்களால் முழுiமாக 6000க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. பகுதியளவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

வீடுகளுக்கு சேதம் ஏற்படாத போதிலும் தொடர்ந்தும் வாழ்வதற்கான சூழல் இல்லாத பகுதிகளும் உள்ளதாக அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...