முன்மாதிரியான மக்கள் பிரதிநிதியாக இருந்தால், அனைத்து சலுகைகளையும் மக்களுக்கே அர்ப்பணிக்க வேண்டும் – முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷாம் நவாஸ்.

Date:

டிட்வா சூறாவளி தாக்கத்தால் முழு இலங்கையும் கடுமையான நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால், மக்கள் வாழ்நாள் முழுவதும் சிரமப்பட்டு உருவாக்கிக் கொண்ட சொத்துகள், வீடுகள், நிலங்கள், வாகனங்கள் உள்ளிட்ட அனைத்தும் சில நொடிகளில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

பலர் அணிந்திருந்த ஆடையோடு மட்டுமே உயிர் தப்பிய நிலையில், தங்கள் வாழ்வை பூஜ்யத்திலிருந்து  மீண்டும் தொடங்க வேண்டிய சூழலில் உள்ளனர்.

இவ்வளவு பெரும் மனிதாபிமான நெருக்கடியில், சிலர் தங்களை ‘பிரபலங்களாக’ காட்டிக்கொள்ள தேவையற்ற விளம்பரத்தைப் பெறுவது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷாம் நவாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இந்த நெருக்கடியில் தங்கள் சொந்த செலவில் மக்களுக்கு உதவி செய்தால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பிறர் அளித்த உதவிப் பொருட்களை ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு, அதை தான் வழங்குவது போல சமூக ஊடகப் பதிவுகளை இடுவது வெட்கக்கேடான செயல். இது ஒரு மனிதாபிமான பேரழிவு  அரங்கேற்ற மேடை அல்ல.”

மேலும் இந்த நேரத்தில் உதவியற்ற அப்பாவி மக்களுக்கு அவர்கள் தங்கள் சொந்த நன்கொடைகளால் உதவியிருந்தால், எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால் அத்தகையவர்கள் மற்றவர்களிடமிருந்து நன்கொடைகளைச் சேகரித்து, அவற்றை மக்கள் முன் விநியோகிப்பது போல் நடிக்கிறார்கள்.

இந்த பேரழிவால் சுமார் 1.6 மில்லியன் மக்கள் பல்வேறு பாதிப்புகளாலும், பல்வேறு வகையான அழிவுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுகர்கள், இப்போதாவது உண்மையிலேயே மக்களுக்காக நிற்க வேண்டும், அரசியல் பிரதிநிதிகள் மக்களுக்கு நேரடி உதவி செய்தல் தான் இப்போது அவர்களின் முக்கிய கடமை.

ஒரு முன்மாதிரியான மக்கள் பிரதிநிதியாக ஊழியராக இருந்தால், நீங்கள் பெறும் சம்பள கொடுப்பனவுகளை அல்லது அரச சலுகைகளை மக்களுக்காக அர்ப்பணிப்பது இந்த நேரத்தில் மக்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய சிறந்த சேவையல்லவா?

அரசு வழங்கும் நிவாரண உதவிகள் சரியான மக்களிடம் சென்று சேருமா என்பதை உறுதி செய்வதும் அவர்களின் பொறுப்பு. கூடுதல் நிதி எதுவும் இருந்தால் அது மீண்டும் அரசின் பொக்கிஷத்திற்கே திருப்பி செலுத்தப்பட வேண்டும்.

முந்தைய ஆட்சி காலங்களில் நிவாரணப் பொருட்கள் மாற்றி வழிமாற்றப்பட்ட நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் கண்காணிப்புகளை வலுப்படுத்த வேண்டும். முந்தைய அரசாங்கங்கள் மக்களுக்கு வழங்கப்படும் உதவியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதை நாங்கள் நினைவில் கொள்கிறோம்.

அந்த நிவாரணப் பொருட்கள் அனைத்தும் முறையாக நிர்வகிக்கப்பட வேண்டிய மற்றும் கூடுதல் பணம் ஒதுக்கப்பட வேண்டிய ஒரு வகையான திட்டத்தை வகுக்க வேண்டும்

மக்களுக்கான உதவியை ‘காட்சி’ ஆக்குவது நிறுத்தப்பட வேண்டும். இது துயரத்தின் நேரம், விளம்பர போட்டியின் நேரம் அல்ல,” என ஷாம் நவாஸ் கடுமையாக தெரிவித்தார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...