அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

Date:

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி மாணவியின் உரை தொடர்பில் கல்வியமைச்சு குறித்த பாடசாலை அதிபரிடம் அறிக்கையொன்றை கோரியுள்ளது.

கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற வண்ண விருது விழாவில் மாணவி விமர்சனத்திற்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இந்த விடயம் சமூக ஊடகங்களில் பரவலானதையடுத்து, இது தொடர்பில் கல்வியமைச்சு விசேட அவதானம் செலுத்தியது.

கல்லூரி அதிபர் தலைமையிலான நிர்வாகத்தின் விருது வழங்கல் தீர்மானங்களால் தான் அநீதிக்கு உள்ளானதாக மாணவி கருத்து வெளியிட்டார்.

இந்நிலையில் கல்வியமைச்சு கோரியுள்ள அறிக்கையை பாடசாலை அதிபர் வழங்கியதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் நாலக கலுவௌ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...

சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

-எம்.யூ.எம்.சனூன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை...

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா,...

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...