வெளிநாட்டு இலங்கையர்களின் பங்களிப்பு அதிகரிப்பு: நவம்பரில் 673.4 மில். டொலர் பதிவு

Date:

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம், நவம்பர் மாதத்தில் 673.4 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வந்த மொத்த பண அனுப்பல் 7.19 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இது 20.7 சதவீத அதிகரிப்பு எனவும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வளர்ச்சி, நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு நிலையை வலுப்படுத்துவதோடு, பொருளாதார மீட்புக்கு வெளிநாட்டு தொழிலாளர்களின் பங்களிப்பு தொடர்ந்தும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...