அனுராதபுரம் மற்றும் குருநாகலில் புதிய வீடமைப்புத் திட்டம் ஆரம்பம்: ஜனாதிபதி பங்கேற்பு!

Date:

‘தித்வா’ சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீட்டிற்கு பதிலாக, ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ் புதிய வீட்டை நிர்மாணிப்பதற்காக அரசாங்கத்தினால் 50 இலட்சம் ரூபா வழங்கும் உத்தியோகபூர்வ வேலைத்திட்டம், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று (9) அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கமைய, அனுராதபுரம் மாவட்டத்தின் கல்நேவ, ஹந்துன்கம, ராஜாங்கனை சிறிமாபுர மற்றும் குருநாகல் மாவட்டத்தின் நிக்கவெரட்டிய, விதிகுலிய சந்தி மற்றும் ரீதிகம தொடம்கஸ்லந்த ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் ஆரம்ப நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான சுற்றறிக்கை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இடர் நிவாரண சேவை மையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வழங்கும் வரைவிலக்கணங்களின் அடிப்படையிலேயே, ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதா என்பது தீர்மானிக்கப்படும்.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...