இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மஜக சார்பில் நலத்திட்ட உதவிகள்!

Date:

இந்தியாவின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகம் எங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் (MJK) சார்பில் தேசியக் கொடி ஏற்றி, பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

அதற்கமைய இன்று காலை கட்சியின் தலைமையகத்தில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து, தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் முக்கிய அங்கமாக, “நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம்” என்ற உறுதிமொழி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வெறும் கொண்டாட்டமாக மட்டுமன்றி, சமூக நலனை முன்னிறுத்தி மஜக இந்த நாளைப் பயன்படுத்தியுள்ளது.

இதன்படி தமிழ்நாடு முழுவதும்  பல இடங்களில் மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன, இரத்ததான முகாம்கள் மற்றும் இலவச மருத்துவ முகாம்கள், மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் விநியோகம், ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு விநியோகம், நோயாளிக்கு பழங்கள் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்குதல் என பல்வேறு மனிதாபிமான உதவிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.முகமது நாசர், தலைமை ஒருங்கிணைப்பாளர் J.S.ரிஃபாயி, மாநிலச் செயலாளர் கலைக்குயில் இப்ராஹிம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

இந்தியாவின் குடியரசு தினத்தைக் கொண்டாடும் வகையில், தமிழக அரசியல் களத்தில் ஒரு கட்சி இவ்வளவு விரிவான சமூகப் பணிகளை முன்னெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச்...

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று...

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...