வெனிசுலா ஜனாதிபதியை அமெரிக்கா கைது செய்தது சட்டபூர்வமானதா?: ஐக்கிய நாடுகள் சபையில் தீவிர கவனம்!

Date:

வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் குறித்து திங்கள்கிழமை (55) அவசர கூட்டத்தை நடத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக வெனிசுலாவின் போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு எதிராக கரீபியன் கடல், கிழக்கு பசிபிக் பகுதியில் 35-க்கும் அதிகமான படகுகள் மீது அமெரிக்கா தொடா் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 115 போ் கொல்லப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து போதைப்பொருள் கடத்தல் விவகாரம், வெனிசுலாவின் எண்ணெய் வளம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தைக்கு தயாராக உள்ளதாக வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலாஸ் மடூரோ தெரிவித்தாா்.

இந்நிலையில், வெனிசுலா மீது அமெரிக்க படைகள் சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தின. வெனிசுலா தலைநகா் கராகஸில் உள்ள இராணுவத் தளங்கள் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்களைக் குறிவைத்து அமெரிக்காவின் 150-க்கும் மேற்பட்ட போா் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

மொத்தம் 7 இடங்களில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடா்ந்து, வெனிசுலா ஜனாதிபதி மதுரோ அவரின் மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்து நாடு கடத்தின. கொகைன் போதைப்பொருளை அமெரிக்காவுக்கு அபரிமிதமாக கடத்துவதற்கு சதி செய்து சட்டவிரோதமாக தங்கள் செல்வத்தை அவா்கள் பெருக்கிக் கொண்டதாக அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில், கொலம்பியா விடுத்த அவசர கோரிக்கையின்பேரில், வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் குறித்து திங்கள்கிழமை கூட்டம் கூட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

ஐ.நா.பொதுச் செயலா்: ஐ.நா.பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘வெனிசுலா மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை மோசமான முன்னுதாரணமாக இருக்கும். இந்த விவகாரத்தில் சா்வதேச சட்டம் மதிக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது’ என்று தெரிவித்தாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வலுவடையும் தாழமுக்கம்: பல பகுதிகளில் மழை

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது,...

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் இம்மாதத்தில் வழங்கப்படும்

இந்த ஆண்டு ஜனவரி மாதம், நாட்டிலுள்ள அரசு மற்றும் உதவி பெறும்...

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (08) நண்பகல் 12:00 மணி...