அனுராதபுரம் மற்றும் குருநாகலில் புதிய வீடமைப்புத் திட்டம் ஆரம்பம்: ஜனாதிபதி பங்கேற்பு!

Date:

‘தித்வா’ சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீட்டிற்கு பதிலாக, ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ் புதிய வீட்டை நிர்மாணிப்பதற்காக அரசாங்கத்தினால் 50 இலட்சம் ரூபா வழங்கும் உத்தியோகபூர்வ வேலைத்திட்டம், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று (9) அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கமைய, அனுராதபுரம் மாவட்டத்தின் கல்நேவ, ஹந்துன்கம, ராஜாங்கனை சிறிமாபுர மற்றும் குருநாகல் மாவட்டத்தின் நிக்கவெரட்டிய, விதிகுலிய சந்தி மற்றும் ரீதிகம தொடம்கஸ்லந்த ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் ஆரம்ப நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான சுற்றறிக்கை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இடர் நிவாரண சேவை மையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வழங்கும் வரைவிலக்கணங்களின் அடிப்படையிலேயே, ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதா என்பது தீர்மானிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு

இந்தியப் பெருங்கடலில் உருவாகியுள்ள டெல்டா அழுத்த தாழ்வு மண்டலம்வேகமாக நெருங்கி வருவதாக...

ஜனவரி 01 முதல் பிரிட்டனுக்கான இலங்கை ஆடை ஏற்றுமதிக்கு வரிச் சலுகை

பிரித்தானியாவின் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் (DCTS) கீழ், இலங்கையின்...

சொஹாரா புஹாரியின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பதவி இரத்து!

கொழும்பு மாநகர சபை உறுப்பினரான சொஹாரா புஹாரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 இலட்சம் பெண்கள் கர்ப்பப்பை வாய்...