அனுராதபுரம் மற்றும் குருநாகலில் புதிய வீடமைப்புத் திட்டம் ஆரம்பம்: ஜனாதிபதி பங்கேற்பு!

Date:

‘தித்வா’ சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீட்டிற்கு பதிலாக, ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ் புதிய வீட்டை நிர்மாணிப்பதற்காக அரசாங்கத்தினால் 50 இலட்சம் ரூபா வழங்கும் உத்தியோகபூர்வ வேலைத்திட்டம், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று (9) அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கமைய, அனுராதபுரம் மாவட்டத்தின் கல்நேவ, ஹந்துன்கம, ராஜாங்கனை சிறிமாபுர மற்றும் குருநாகல் மாவட்டத்தின் நிக்கவெரட்டிய, விதிகுலிய சந்தி மற்றும் ரீதிகம தொடம்கஸ்லந்த ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் ஆரம்ப நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான சுற்றறிக்கை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இடர் நிவாரண சேவை மையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வழங்கும் வரைவிலக்கணங்களின் அடிப்படையிலேயே, ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதா என்பது தீர்மானிக்கப்படும்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...