இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மஜக சார்பில் நலத்திட்ட உதவிகள்!

Date:

இந்தியாவின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகம் எங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் (MJK) சார்பில் தேசியக் கொடி ஏற்றி, பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

அதற்கமைய இன்று காலை கட்சியின் தலைமையகத்தில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து, தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் முக்கிய அங்கமாக, “நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம்” என்ற உறுதிமொழி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வெறும் கொண்டாட்டமாக மட்டுமன்றி, சமூக நலனை முன்னிறுத்தி மஜக இந்த நாளைப் பயன்படுத்தியுள்ளது.

இதன்படி தமிழ்நாடு முழுவதும்  பல இடங்களில் மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன, இரத்ததான முகாம்கள் மற்றும் இலவச மருத்துவ முகாம்கள், மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் விநியோகம், ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு விநியோகம், நோயாளிக்கு பழங்கள் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்குதல் என பல்வேறு மனிதாபிமான உதவிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.முகமது நாசர், தலைமை ஒருங்கிணைப்பாளர் J.S.ரிஃபாயி, மாநிலச் செயலாளர் கலைக்குயில் இப்ராஹிம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

இந்தியாவின் குடியரசு தினத்தைக் கொண்டாடும் வகையில், தமிழக அரசியல் களத்தில் ஒரு கட்சி இவ்வளவு விரிவான சமூகப் பணிகளை முன்னெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...