பாடசாலை மாணவருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு; கல்வி அமைச்சின் உத்தரவு!

Date:

கொழும்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவருக்கும் மூன்று பெண் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவு மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் அது தொடர்பான காணொளிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா பாடசாலையின் அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் தற்போது பரப்பப்படும் காணொளிகளை கல்வி அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பாடசாலை அதிபரின் அறிக்கையின் அடிப்படையில் விசாரணைகள் முடிந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.

அறிக்கை கிடைக்கும் வரை, சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் உட்பட எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் அவர் எடுத்துரைத்தார்.

தற்போது, ​குறித்த மாணவர், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவரின் பெற்றோர் சம்பந்தப்பட்ட பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் உச்சம்

சூரியனின் வடதிசை நோக்கிய நகர்விற்கு அமைவாக, ஏப்ரல் 05 முதல் 15 ஆம்...

புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...

குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 இறுதி அறிக்கை கையளிப்பு.

இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 தொடர்பான இறுதி...

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிமித்தம் கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட...